<object width=

உலகத்திலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர்: ஐரோப்பிய வல்லுநர் ஜெரார்ட் சாலியண்ட் 

 

உலகத்தில் தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று இனமோதல்கள் தொடர்பிலான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெரார்ட் சாலியண்ட் கூறியுள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

உலகத்திலேயே தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர்.

வியட்நாமியர்களும் எரித்தியர்களும் இத்தகைய செயற்திறன் மிக்க இயக்கத்தினராக இருந்தனர். இப்போது விடுதலைப் புலிகள் உள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளை அழித்துவிட முடியாது.

தமிழ் மக்களினது வேண்டுகோள்களானது நீதியானது. இந்த நாட்டின் ஒரு பகுதியானவர்கள் அவர்கள். அவர்கள் சிறுபான்மையினராக அங்கீகரித்து அரசியல் சுயாட்சி அல்லது கூட்டமைப்புக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இராணுவ வழித் தீர்வு என்பது சாத்தியமில்லை என்றார் அவர்.

ஆனால் சாலியண்ட்டின் இந்தக் கருத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். இலங்கையின் களநிலைமையை அறியாமல் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கோத்தபாய கூறியுள்ளார்.

மகிந்தவின் தனிப்பட்ட செலவுகளுக்கான ஒதுக்கீடு மிகவும் அதிகரிப்பு: மங்கள சமரவீர
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செலவுகளுக்கான ஒதுக்கீடு மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவரான மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது:

மகிந்தவின் தனிப்பட்ட செலவுகளுக்காக ரூ 3.73 பில்லியனிலிருந்து ரூ 5.75 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் அப்பால் 1.4 பில்லியன் "இதர முதலீடுகள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த கால அரச தலைவர்களின் கீழான  வரவு செலவுத் திட்டத்தில் இத்தகைய ஒதுக்கீடு எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

மிலிந்த மொறகொடவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோல்வியடையச் செய்வது என்பது அரசாங்கத்துக்கு பாரிய சவாலாக உள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கைவிடுதல், விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக மகிந்தவுக்கு எதிரான விசாரணை நடத்த நாடாளுமன்ற பொறுப்புக் குழு அமைத்தலைத் தவிர்த்தல், அரசாங்கத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் கோப் நிர்வாகத்தைக் கைவிடுதல் என்பதற்காகத்தான் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பிற்போட்டு வருகின்றனர்.

எதிர்காலத்தில் எமது தேசிய காங்கிரஸ் கட்சி அரசாங்கம் அமைக்கும் போது டி.எம். ஜயரட்ண அல்லது மூத்த சுதந்திரக் கட்சி உறுப்பினர், பிரதிப் பிரதமராக இருப்பார் என்றார் மங்கள சமரவீர.

 






powered by klack.org, dem gratis Homepage Provider

Verantwortlich für den Inhalt dieser Seite ist ausschließlich
der Autor dieser Homepage. Mail an den Autor